Thursday, 2 July 2009

தாம்தூம் திருமணங்கள்

ஆவணிமாதம் வந்தாலே குடும்ப தலைவனின் பாடு திண்டாட்டம் தான் .

வீட்டில் நிறைந்து கிடக்கும் கல்யாண பத்திரிகைகளை தேதிவாரியாக அடுக்கி தகுதிக்ஏற்ப புடவைகளை (மண்டபத்தை பொறுத்து ) செலக்ட் செய்து Dry Wash க்கு கொடுத்து , அழகு நிலையம் சென்று என குடும்ப நிதி துறைக்கு இந்த மாதம் பட்ஜெட்டில் புடவை தான்.

நெருங்கிய உறவினர் வீட்டு திருமணம் என்றால் இன்னும் கஷ்டம். ஆடி தள்ளுபடியில் விலை குறைவு என கணவரிடம் இட்டுக்கட்டி புது பட்டு புடவை வாங்கி கணவரின் வழுக்கை தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.

திருமணத்திற்கு செல்பவர்களே இந்த பந்தா என்றால் கல்யாண வீட்டார் செய்வதை பார்த்தால் நமக்கு தலை சுற்றும்.

மத்திய நடுத்தர குடும்பங்கள் இளைய தலைமுறையின் வருமானத்தால் சற்று அகல கால் வைக்கவே விரும்புகிறார்கள்.
மேல் நடுத்தர குடும்பங்கள் தங்கள் வீட்டு திருமணம் Exclusive ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
புலியை பார்த்து சூடு போட்டு கொண்ட பூனையை போல் , கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெண் /பிள்ளையின் சேமிப்பை தண்ணீராய் செலவு செய்கின்றனர்.

திருமணம் முடிவானவுடன் தர வரிசையில் முதல் மூன்று இடத்தில் உள்ள மண்டபம் மற்றும் சமையல்காரரை தேடி ஓடுகின்றனர். இதற்கு சிபாரிசு வேறு !?

அடுத்தது மெனு . குடும்பத்தினர் அனைவரும் மண்டையை பிய்த்து கொண்டு , யாரும் போடாத ஒரு உணவு வகையாவது இருக்குமாறு முடிவு செய்கிறார்கள் .
நிச்சயம் அது யாரும் வாயில் போடாத உணவு தான்!!!.

மணவறை,மாலை,செண்டு என அனைத்தும் பெண் / மாப்பிள்ளையின் உடையின் நிறத்திற்கு பொருத்தமான மலர்களை தேர்வு செய்கிறார்கள்.
மலர்களின் மணத்தை விட நிறமே முக்கியத்துவம் பெறுகிறது.

பெண் வீட்டாராக இருப்பின் இன்னும் கஷ்டம்டா சாமீ . பெண் அலங்காரத்திற்கு
குறைந்தபட்சம் Rs.3000/- வேண்டும். அழகு நிலையத்தில் திருமண பெண் அலங்காரத்திற்கு Rs. 3000 ஆரம்பித்து Rs.30000/- வரை சொல்கிறார்கள்.
கேட்டால் Package என்கிறார்கள். Rs.30000/- புக் செய்கிறவர்கள் ஒரு மாதம் அழகு நிலையமே கதி என்று கிடக்க வேண்டுமாம். என்ன கொடுமை சார் இது ?!!!
பெண் வீட்டில் இருக்கும் மற்ற பெண்கள் மணபெண்ணுக்கு நிகராக புது பட்டு புடவை , அதில் embroidary , அலங்காரம் என பட்டை கிளப்புகிறார்கள்.

மண பெண்ணுக்கு எடுக்கப்படும் புடவை விலை கேட்டால் Heart Attack வந்து விடும். குறைந்தபட்சம் Rs.20000/- . அப்புறம் அதில் Designer Embroidary வேறு.
இந்த புடைவையின் விலை மூலமாக தான் மாப்பிள்ளை வீட்டாரின் பண பலம் உறவினர்களுக்கு தெரிகிறது.

மாப்பிள்ளை அழைப்பின் போது எடுத்து செல்லும் சீர் தட்டுகளை அலங்காரம் செய்ய அடையார் ஆனந்த பவன் வேண்டும் . அதுவும் Kaju Sweets ( Rs.350 /Kg).
பெண் வீட்டின் செல்வ செழிப்பு இந்த தட்டுகளில் தான் வெளிப்படுகிறது.

மொத்தத்தில் ஒரு திருமணத்தின் மூலமாக தான் இரு வீட்டின் பொருளாதார நிலைமை உலகுக்கு தெரிகிறது .

தற்போது சென்னையில் பரவி வரும் ஒரு பழக்கம் விரைவில் கோவை வந்து சேரும் என நினைக்கிறேன் . திருமணத்தில் வந்தோரை "வாங்க" என இன்முகத்துடன் வரவேற்க கல்லூரி பெண்களை நிற்க செய்கிறார்கள் சென்னையில்?!!!!
"வாங்க வாங்க" என வாய் நிறைய வரவேற்கும் இடத்தில் முகம் தெரியா நபர்கள்.
இதனால் யார் வீட்டு திருமணத்திற்கு வந்துள்ளோம் என குழம்ப தான் வாய்ப்புகள் அதிகம். வரவேற்பில் அன்பை விட அழகு தானே முக்கியம் ?
பரவட்டும் இந்த புது கலாச்சாரம் கொங்கு மண்டலத்திலும் !!!!
"மலர்களின் ராஜா ஒரு ரோஜா தான் . அனைத்து மலர்களும் ராஜாவாக ஆசைபடுகிறதே!"





No comments:

Post a Comment