Tuesday, 9 June 2009

மாற்றப்படும் இளைய சமுதாயம்

இளைய சமுதாயம் செல்லும் பாதையை வடிவமைத்து கொடுக்கும் மூத்த தலைமுறையினர் சரியாக செயல்படுகின்றனரா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இன்று நிலவும் குடும்பவாழ்க்கைமுறை பற்றி நாம் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம். கணவன்,மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால்,
குழந்தைகள் தனியே விடபடுகின்றனர். குழந்தைகள் வளர வளர நம் குற்றஉணர்வு அவர்கள் கேட்டதை வாங்கி தர செய்கிறது. குழந்தைகளிடம் உள்ள தவறுகளை கவனிக்க தவறுவதின் பலனை நாம் தான் அனுபவிக்க வேண்டும் பின்னாளில்.
குழந்தைகளுக்கு பத்துவயதாகும் முன்பே நம் வீட்டு பழக்கவழக்கம் , பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது, மற்றவர்களுக்கு விட்டு கொடுப்பது,
சுழலுக்கு தகுந்தமாதிரி நடந்து கொள்வது போன்றவைற்றை சொல்லி கொடுக்க வேண்டும். குறிப்பாக தெய்வ நம்பிக்கையை வளர செய்ய வேண்டும்.

எந்த மதம் ஆனாலும் மனிதன் தவறு செய்யாமல் இருக்க செய்யும் தெய்வ நம்பிக்கை.

டீன் ஏஜ் வயதில், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நாம் தான் dress select செய்ய வேண்டும். நாகரிகமாக இருக்க வேண்டும் என்று மற்றவர் கவனத்தை ஈர்க்கும் ஆடையை எடுக்க அனுமதிக்க கூடாது. இப்பொது பெரும்பாலான பெண்கள் தங்கள் பெண் குழந்தைகள் சினிமாவில் வரும் கதாநாயகிகள் போல் ஆடை அணிந்து அழகாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு அவர்கள் விரும்பும் உடையை வாங்கி தருகின்றனர். இது மிகவும் தவறான பழக்கம்.

கண்ணை உறுத்தாத மனதுக்கு வெளிச்சம் தர கூடிய ஒரு வெள்ளி குத்துவிளக்கு போன்று தான் நம் பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்ல வேண்டுமே தவிர இருட்டை பகலாக்கும் மெர்குரி விளக்காக அல்ல.

மாறி வரும் நாகரிகமான யுகத்தில், தனக்கு மனைவியாக வரும் போகும் பெண்ணை பற்றிய ஆணின் வரையறை மாற்றம் பெறவில்லை . இப்பொது பெண் பார்த்து கொண்டு இருக்கும் பையனிடம் கேளுங்கள் " உனக்கு வரும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என ? "நிச்சயம் அழகான அமைதியான குடும்பபாங்கான பெண் வேண்டும் என தான் பதில்வருமே தவிர Hitech பெண்
வேண்டும் என சொல்ல மாட்டார்கள்.
பெண் குழந்தைகளை பொறுத்த வரை எல்லா சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய புத்திசாலித்தனம் , நிறை குடம் போன்ற படிப்பறிவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, விட்டு கொடுத்தல் , சுற்றத்தை அனுசரிக்கும் குணம் , அடக்கமான அழகு ஆகியவையே நாம் அவர்களுக்கு கொடுக்கும் சீர்.
ஆண் குழந்தைகளுக்கு முக்கியமாக கற்று கொடுக்க வேண்டியவை பொய் சொல்லாமை. அவர்களுக்கு வேண்டிய சுதந்திரம் நிச்சயம் நாம் கொடுக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்களா என பார்க்க வேண்டும்.
சிறந்த கல்வியறிவு, நல்ல பழக்க வழக்கம் , அனைவரையும் புரிந்து கொள்ளும் மனம், விட்டு கொடுத்தல் , பெண்களை சமமாக நினைக்கும் குணம் இவற்றுடன் வளர்க்கப்படும் நம் ஆண் குழந்தைகள் நம் நாட்டின் சிறந்த குடிமகன்கள். அவர்களால் ஒரு சிறந்த குடும்பம் , சமுதாயம் ,நாடு உருவாவது நிச்சயம்.
இல்லைஎனில் மாமியார்,மாமனார் வேண்டாம் என தனிகுடித்தனம் வந்துள்ள நாம் நிச்சயம் நம் குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு அன்றும் தனி குடித்தனம் தான் இருப்போம் .
எதிர்கால இந்திய கலாசாரம் நம் வளர்ப்பில் தான் உள்ளது. சற்று யோசித்து செயல்படுங்கள்.

நன்றாக வளர்க்கப்பட்ட நம் குழந்தைகள் கூட்டமாக பூத்துள்ள மனம் வீசும் மல்லிகை மலர்கள்.




No comments:

Post a Comment