சமுதாயத்தில் ஆண்களுக்கு சம உரிமை வேண்டும்
என போரிடும் பெண்களுக்கு சம உரிமை
கிடைத்ததா ?
பள்ளி தொடங்கி பணி வரை இன்று ஆண்களுக்கு
பெரும் சவாலாக இருப்பது பெண் இனமே !!
பள்ளியில் முதல் மார்க் பெறுவது பெண்ணே !
தொழில் சார்ந்த பட்ட படிப்புகளில் மதிப்பெண்
பட்டியலில் முதலிடம் பெறுவதும் பெண்களே !
தெரு கூட்டும் பணி முதல் விமானம் ஓட்டும் பணி
வரை பெண்களின் விண்ணப்பமே முன்னணியில் உள்ளது.
உடல் வலுவிலும் ஆண்களுக்கு இணையானவர்கள்
நாங்கள் என்பதிற்கு கட்டியம் கூறுகிறது வீதிக்கு வீதி
உள்ள பெண்கள் உடற்பயற்சி நிலையங்கள் !!
அழகிலும் ஆண்கள் எங்களுக்கு என்றும் அடிமை தான்
என சொல்லாமல் சொல்கிறது நடுத்தர குடும்ப பட்ஜெட்டில்
இடம் பிடித்துள்ள அழகு நிலைய நிதி ஒதுக்கல்!!
அரசியலிலும் பெண்களின் ஆளுமை வேண்டும் என
30% அளிக்கபட்டுள்ளது .
இவை போறாது என ஆண் ஆசிரிய வர்க்கத்தை
பூண்டோடு அழித்து வருகிறது அரசின் பெண்
ஆசிரிய நியமன உத்தரவு.
ஆண்களுக்கு போட்டி இல்லாமல் கிடைக்கும்
ஒரே பட்டபடிப்பு சமையல் கலை தான்.
பெண்கள் வீட்டிலும், வெளியிலும் ஆண்களுக்கு என
விட்டு கொடுத்த ஒரே துறை தான் சமையல் கலை துறை!!!
சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் இருந்த குடும்ப வாழ்க்கை
முறை இன்று சத்தியமாக நகர்புறங்களில் இல்லை.
மிகவும் பின் தங்கிய கிரமாங்களில் அதுவும் அரிதாக பார்க்கலாம் .
அறிவிலும், அழகிலும் , பணத்திலும் சற்றே குறைந்த ஆணின்
கனவு , எதிர்காலம் இப்போட்டிகளால் கலைந்து போவது தான்
நிதர்சனமான உண்மை .
எல்லாவற்றையும் மீறி வெற்றி பெற்ற
ஒரு ஆணின் பின் இருப்பதும் பெண்ணே !
உள்ளாட்சி துறை , வெளிஉறவுதுறை என இரு துறைகளையும்
தன்னிடம் வைத்துள்ள இல்லத்தரசிகள் கணவரையும் , மகன்களையும்
படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை . குண்டுசி முதல் கார் வாங்குவது
வரை அவர்கள் விருப்பதிற்கு தான் ஆண்கள் தலை ஆட்ட வேண்டும்.
மேற் குறிப்பட்ட ரகம் இன்று வேண்டுமானால் இந்திய நாட்டின் ஜன தொகையில் 10% இருக்கலாம் . ஆனால் மிக விரைவில் இது 90%
ஆகி விடும்.
மோட்டார் பைக் விற்பனைக்கு சமமாக விற்பனை ஆகும் scooty pep
தான் இதற்கு அத்தாட்சி .
ஆண்களுக்கு சம உரிமை தர வேண்டிய சூழலில் தான்
பெண்கள் சமுதாயம் இருக்கிறது.
பாவம் பிழைத்து போகட்டும் !
சற்றே இடம் கொடுங்கள் அவர்கள் நிற்க !!!
மலர்களில் அவர்கள் இலையாகவது இருந்து விட்டு போகட்டும் !!!!!!!
Wednesday, 24 June 2009
Wednesday, 17 June 2009
சகலகலாவல்லவர்
எங்கள் வீட்டின் சகல கலா வல்லவர் சாட்சாத் என் மாமனார் தான்.
இன்று அவர் எங்களுடன் இல்லை என்றாலும் அவர் நினைவுகள் பசுமையாய்
அனைவர் மனதிலும் பதிந்து உள்ளது.
என் மாமனார் திரு.நாராயணசாமி, பள்ளி படிப்பை முடித்தவுடன் PSG Industrial Institute இல் வேலைக்கு சேர்ந்து ஓய்வு பெறும் போது Pump Assembly Superintendent ஆக ஓய்வு பெற்றார். அவர் அங்கு வேலை செய்யும் போது நான் PSG Polytechnic இல் Diploma பயின்று வந்தேன். என் Workshop training இன் போது இவரிடம் தான் ரிப்போர்ட் Sign வாங்க வேண்டும். வேலை விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். எங்கள் Sandwich Students இவருக்கு "மாமா " என புனை பேர் வைத்து இருந்தோம். பின்னாளில் அவரே எனக்கு மாமனார் ஆனது தான் ஆச்சர்யம்!!!. என் திருமணத்திற்கு வந்த என் கிளாஸ் மேட் அனைவரும் "மாமாவா உன் மாமனார் ?" என துக்கம் விசாரித்தது தனி கதை .
வேலையில் இருந்து ஓய்வு பெற்றாலும், வீட்லேயே Workshop வைத்து , என் கணவரையும் வேலைக்கு அனுப்பாமல் சொந்த தொழில் செய்ய வைத்தார்.
வேலை விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். குறிப்பாக நேரம் தவறாதவர்.
அவர் நெற்றியில் நாமத்துடன் வெள்ளை வேட்டி , கை வைத்த பனியனுடன்
Workshop வாசலில் இருக்கிறார் என்றால் காலை மணி சரியாக 7 என சொல்லலாம். ஒரு வேலையை செய்யும் முறை பற்றி தெளிவாக சொல்லி குடுப்பார். அவர் கடைசி வரை வேலை செய்தார். செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு எடுத்துகாட்டாக இருந்தார்.
வீட்டுக்கு தளம் போடுவது, தொட்டி கட்டுவது, மர கதவு, இரும்பு கதவு செய்வது போன்ற அனைத்து வேலைகளும் செய்வார். எங்கள் வீடுகளில் இன்னும் அவர் செய்த இரும்பு Compund Gate தான் உள்ளது.
எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு முடி திருத்தும் பணியை கூட அழகாக செய்வார்.
அவர் கை வண்ணம் எங்கள் சமையல் அறையையும் அலங்கரிக்கும். Cooker, பால் Cooker கை பிடி உடைந்தால் புதிய bakelite கைப்பிடி மாற்ற விட மாட்டார். தானே மர கைப்பிடி செய்து மாற்றுவார். கத்தி , இரும்பு உரல் , தோசை கல் அனைத்தும் அவர் கைவண்ணம் தான்.
சமையலில் அவர் நள மகாராஜா தான் . சூப்பரா சமைப்பார் . யாருக்காகவும் காத்திருக்காமல் அவர் சமைக்க ஆரம்பித்து விடுவார். என்ன அவர் சமையலில் முருங்கைகாய் முக்கிய இடம் பிடிக்கும். தன் பசியை மட்டுமன்றி அனைவரின் பசி , ருசி பற்றி அறிந்தவர். பணி , பள்ளியில் இருந்து திரும்பும் போது மாலை உணவு தயாராக இருக்கும். நாங்கள் தனி குடித்தனம் இருந்தாலும் அவர் செய்யும் மாலை உணவை எங்களுக்கு தவறாமல் குடுத்து அனுப்புவார்.
மனைவிக்கு சுதந்திரம் அளிப்பதில் அவர் அர்த்தனரிஸ்வரர்.
வரவு , செலவுகளை சரியாக கணக்கு வைப்பார் சித்ரகுப்தனை போல் !
இவரின் சிக்கனத்தை பற்றி தனி புத்தகமே எழுத வேண்டும்.
வாழ்வில் எளிமையை பற்றி இவரிடம் தான் கற்க வேண்டும்.
இவரிடம் நல்ல பெயர் வாங்குவது வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்
பெறுவதற்கு சமம்.
மொத்தத்தில் இவர்
" மலர்களில் ஒரு பிரம்ம கமலம் "
இன்று அவர் எங்களுடன் இல்லை என்றாலும் அவர் நினைவுகள் பசுமையாய்
அனைவர் மனதிலும் பதிந்து உள்ளது.
என் மாமனார் திரு.நாராயணசாமி, பள்ளி படிப்பை முடித்தவுடன் PSG Industrial Institute இல் வேலைக்கு சேர்ந்து ஓய்வு பெறும் போது Pump Assembly Superintendent ஆக ஓய்வு பெற்றார். அவர் அங்கு வேலை செய்யும் போது நான் PSG Polytechnic இல் Diploma பயின்று வந்தேன். என் Workshop training இன் போது இவரிடம் தான் ரிப்போர்ட் Sign வாங்க வேண்டும். வேலை விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். எங்கள் Sandwich Students இவருக்கு "மாமா " என புனை பேர் வைத்து இருந்தோம். பின்னாளில் அவரே எனக்கு மாமனார் ஆனது தான் ஆச்சர்யம்!!!. என் திருமணத்திற்கு வந்த என் கிளாஸ் மேட் அனைவரும் "மாமாவா உன் மாமனார் ?" என துக்கம் விசாரித்தது தனி கதை .
வேலையில் இருந்து ஓய்வு பெற்றாலும், வீட்லேயே Workshop வைத்து , என் கணவரையும் வேலைக்கு அனுப்பாமல் சொந்த தொழில் செய்ய வைத்தார்.
வேலை விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். குறிப்பாக நேரம் தவறாதவர்.
அவர் நெற்றியில் நாமத்துடன் வெள்ளை வேட்டி , கை வைத்த பனியனுடன்
Workshop வாசலில் இருக்கிறார் என்றால் காலை மணி சரியாக 7 என சொல்லலாம். ஒரு வேலையை செய்யும் முறை பற்றி தெளிவாக சொல்லி குடுப்பார். அவர் கடைசி வரை வேலை செய்தார். செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு எடுத்துகாட்டாக இருந்தார்.
வீட்டுக்கு தளம் போடுவது, தொட்டி கட்டுவது, மர கதவு, இரும்பு கதவு செய்வது போன்ற அனைத்து வேலைகளும் செய்வார். எங்கள் வீடுகளில் இன்னும் அவர் செய்த இரும்பு Compund Gate தான் உள்ளது.
எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு முடி திருத்தும் பணியை கூட அழகாக செய்வார்.
அவர் கை வண்ணம் எங்கள் சமையல் அறையையும் அலங்கரிக்கும். Cooker, பால் Cooker கை பிடி உடைந்தால் புதிய bakelite கைப்பிடி மாற்ற விட மாட்டார். தானே மர கைப்பிடி செய்து மாற்றுவார். கத்தி , இரும்பு உரல் , தோசை கல் அனைத்தும் அவர் கைவண்ணம் தான்.
சமையலில் அவர் நள மகாராஜா தான் . சூப்பரா சமைப்பார் . யாருக்காகவும் காத்திருக்காமல் அவர் சமைக்க ஆரம்பித்து விடுவார். என்ன அவர் சமையலில் முருங்கைகாய் முக்கிய இடம் பிடிக்கும். தன் பசியை மட்டுமன்றி அனைவரின் பசி , ருசி பற்றி அறிந்தவர். பணி , பள்ளியில் இருந்து திரும்பும் போது மாலை உணவு தயாராக இருக்கும். நாங்கள் தனி குடித்தனம் இருந்தாலும் அவர் செய்யும் மாலை உணவை எங்களுக்கு தவறாமல் குடுத்து அனுப்புவார்.
மனைவிக்கு சுதந்திரம் அளிப்பதில் அவர் அர்த்தனரிஸ்வரர்.
வரவு , செலவுகளை சரியாக கணக்கு வைப்பார் சித்ரகுப்தனை போல் !
இவரின் சிக்கனத்தை பற்றி தனி புத்தகமே எழுத வேண்டும்.
வாழ்வில் எளிமையை பற்றி இவரிடம் தான் கற்க வேண்டும்.
இவரிடம் நல்ல பெயர் வாங்குவது வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்
பெறுவதற்கு சமம்.
மொத்தத்தில் இவர்
" மலர்களில் ஒரு பிரம்ம கமலம் "
Tuesday, 9 June 2009
மாற்றப்படும் இளைய சமுதாயம்
இளைய சமுதாயம் செல்லும் பாதையை வடிவமைத்து கொடுக்கும் மூத்த தலைமுறையினர் சரியாக செயல்படுகின்றனரா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இன்று நிலவும் குடும்பவாழ்க்கைமுறை பற்றி நாம் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம். கணவன்,மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால்,
குழந்தைகள் தனியே விடபடுகின்றனர். குழந்தைகள் வளர வளர நம் குற்றஉணர்வு அவர்கள் கேட்டதை வாங்கி தர செய்கிறது. குழந்தைகளிடம் உள்ள தவறுகளை கவனிக்க தவறுவதின் பலனை நாம் தான் அனுபவிக்க வேண்டும் பின்னாளில்.
குழந்தைகளுக்கு பத்துவயதாகும் முன்பே நம் வீட்டு பழக்கவழக்கம் , பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது, மற்றவர்களுக்கு விட்டு கொடுப்பது,
சுழலுக்கு தகுந்தமாதிரி நடந்து கொள்வது போன்றவைற்றை சொல்லி கொடுக்க வேண்டும். குறிப்பாக தெய்வ நம்பிக்கையை வளர செய்ய வேண்டும்.
எந்த மதம் ஆனாலும் மனிதன் தவறு செய்யாமல் இருக்க செய்யும் தெய்வ நம்பிக்கை.
டீன் ஏஜ் வயதில், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நாம் தான் dress select செய்ய வேண்டும். நாகரிகமாக இருக்க வேண்டும் என்று மற்றவர் கவனத்தை ஈர்க்கும் ஆடையை எடுக்க அனுமதிக்க கூடாது. இப்பொது பெரும்பாலான பெண்கள் தங்கள் பெண் குழந்தைகள் சினிமாவில் வரும் கதாநாயகிகள் போல் ஆடை அணிந்து அழகாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு அவர்கள் விரும்பும் உடையை வாங்கி தருகின்றனர். இது மிகவும் தவறான பழக்கம்.
கண்ணை உறுத்தாத மனதுக்கு வெளிச்சம் தர கூடிய ஒரு வெள்ளி குத்துவிளக்கு போன்று தான் நம் பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்ல வேண்டுமே தவிர இருட்டை பகலாக்கும் மெர்குரி விளக்காக அல்ல.
மாறி வரும் நாகரிகமான யுகத்தில், தனக்கு மனைவியாக வரும் போகும் பெண்ணை பற்றிய ஆணின் வரையறை மாற்றம் பெறவில்லை . இப்பொது பெண் பார்த்து கொண்டு இருக்கும் பையனிடம் கேளுங்கள் " உனக்கு வரும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என ? "நிச்சயம் அழகான அமைதியான குடும்பபாங்கான பெண் வேண்டும் என தான் பதில்வருமே தவிர Hitech பெண்
வேண்டும் என சொல்ல மாட்டார்கள்.
பெண் குழந்தைகளை பொறுத்த வரை எல்லா சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய புத்திசாலித்தனம் , நிறை குடம் போன்ற படிப்பறிவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, விட்டு கொடுத்தல் , சுற்றத்தை அனுசரிக்கும் குணம் , அடக்கமான அழகு ஆகியவையே நாம் அவர்களுக்கு கொடுக்கும் சீர்.
ஆண் குழந்தைகளுக்கு முக்கியமாக கற்று கொடுக்க வேண்டியவை பொய் சொல்லாமை. அவர்களுக்கு வேண்டிய சுதந்திரம் நிச்சயம் நாம் கொடுக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்களா என பார்க்க வேண்டும்.
சிறந்த கல்வியறிவு, நல்ல பழக்க வழக்கம் , அனைவரையும் புரிந்து கொள்ளும் மனம், விட்டு கொடுத்தல் , பெண்களை சமமாக நினைக்கும் குணம் இவற்றுடன் வளர்க்கப்படும் நம் ஆண் குழந்தைகள் நம் நாட்டின் சிறந்த குடிமகன்கள். அவர்களால் ஒரு சிறந்த குடும்பம் , சமுதாயம் ,நாடு உருவாவது நிச்சயம்.
இல்லைஎனில் மாமியார்,மாமனார் வேண்டாம் என தனிகுடித்தனம் வந்துள்ள நாம் நிச்சயம் நம் குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு அன்றும் தனி குடித்தனம் தான் இருப்போம் .
எதிர்கால இந்திய கலாசாரம் நம் வளர்ப்பில் தான் உள்ளது. சற்று யோசித்து செயல்படுங்கள்.
நன்றாக வளர்க்கப்பட்ட நம் குழந்தைகள் கூட்டமாக பூத்துள்ள மனம் வீசும் மல்லிகை மலர்கள்.
இன்று நிலவும் குடும்பவாழ்க்கைமுறை பற்றி நாம் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம். கணவன்,மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால்,
குழந்தைகள் தனியே விடபடுகின்றனர். குழந்தைகள் வளர வளர நம் குற்றஉணர்வு அவர்கள் கேட்டதை வாங்கி தர செய்கிறது. குழந்தைகளிடம் உள்ள தவறுகளை கவனிக்க தவறுவதின் பலனை நாம் தான் அனுபவிக்க வேண்டும் பின்னாளில்.
குழந்தைகளுக்கு பத்துவயதாகும் முன்பே நம் வீட்டு பழக்கவழக்கம் , பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது, மற்றவர்களுக்கு விட்டு கொடுப்பது,
சுழலுக்கு தகுந்தமாதிரி நடந்து கொள்வது போன்றவைற்றை சொல்லி கொடுக்க வேண்டும். குறிப்பாக தெய்வ நம்பிக்கையை வளர செய்ய வேண்டும்.
எந்த மதம் ஆனாலும் மனிதன் தவறு செய்யாமல் இருக்க செய்யும் தெய்வ நம்பிக்கை.
டீன் ஏஜ் வயதில், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு நாம் தான் dress select செய்ய வேண்டும். நாகரிகமாக இருக்க வேண்டும் என்று மற்றவர் கவனத்தை ஈர்க்கும் ஆடையை எடுக்க அனுமதிக்க கூடாது. இப்பொது பெரும்பாலான பெண்கள் தங்கள் பெண் குழந்தைகள் சினிமாவில் வரும் கதாநாயகிகள் போல் ஆடை அணிந்து அழகாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு அவர்கள் விரும்பும் உடையை வாங்கி தருகின்றனர். இது மிகவும் தவறான பழக்கம்.
கண்ணை உறுத்தாத மனதுக்கு வெளிச்சம் தர கூடிய ஒரு வெள்ளி குத்துவிளக்கு போன்று தான் நம் பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்ல வேண்டுமே தவிர இருட்டை பகலாக்கும் மெர்குரி விளக்காக அல்ல.
மாறி வரும் நாகரிகமான யுகத்தில், தனக்கு மனைவியாக வரும் போகும் பெண்ணை பற்றிய ஆணின் வரையறை மாற்றம் பெறவில்லை . இப்பொது பெண் பார்த்து கொண்டு இருக்கும் பையனிடம் கேளுங்கள் " உனக்கு வரும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என ? "நிச்சயம் அழகான அமைதியான குடும்பபாங்கான பெண் வேண்டும் என தான் பதில்வருமே தவிர Hitech பெண்
வேண்டும் என சொல்ல மாட்டார்கள்.
பெண் குழந்தைகளை பொறுத்த வரை எல்லா சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய புத்திசாலித்தனம் , நிறை குடம் போன்ற படிப்பறிவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, விட்டு கொடுத்தல் , சுற்றத்தை அனுசரிக்கும் குணம் , அடக்கமான அழகு ஆகியவையே நாம் அவர்களுக்கு கொடுக்கும் சீர்.
ஆண் குழந்தைகளுக்கு முக்கியமாக கற்று கொடுக்க வேண்டியவை பொய் சொல்லாமை. அவர்களுக்கு வேண்டிய சுதந்திரம் நிச்சயம் நாம் கொடுக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்களா என பார்க்க வேண்டும்.
சிறந்த கல்வியறிவு, நல்ல பழக்க வழக்கம் , அனைவரையும் புரிந்து கொள்ளும் மனம், விட்டு கொடுத்தல் , பெண்களை சமமாக நினைக்கும் குணம் இவற்றுடன் வளர்க்கப்படும் நம் ஆண் குழந்தைகள் நம் நாட்டின் சிறந்த குடிமகன்கள். அவர்களால் ஒரு சிறந்த குடும்பம் , சமுதாயம் ,நாடு உருவாவது நிச்சயம்.
இல்லைஎனில் மாமியார்,மாமனார் வேண்டாம் என தனிகுடித்தனம் வந்துள்ள நாம் நிச்சயம் நம் குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு அன்றும் தனி குடித்தனம் தான் இருப்போம் .
எதிர்கால இந்திய கலாசாரம் நம் வளர்ப்பில் தான் உள்ளது. சற்று யோசித்து செயல்படுங்கள்.
நன்றாக வளர்க்கப்பட்ட நம் குழந்தைகள் கூட்டமாக பூத்துள்ள மனம் வீசும் மல்லிகை மலர்கள்.
Subscribe to:
Comments (Atom)
