சுற்றம் சூழ வாழ்ந்த காலம் போய், உறவுகளை அறிமுகம் செய்ய வேண்டிய கால கட்டத்தில் நாம் உள்ளோம். முதல் சுற்று சொந்தங்கள் , இரண்டாம் சுற்று சொந்தங்கள் என உறவுகளை பிரித்து வீட்டு விழாக்களுக்கு அழைப்பது இன்றைய நாகரிகம் ஆகி விட்டது . உறவு வட்டம் சுருங்கி , நட்பு வட்டம் விரிவடைந்துள்ளது.அதற்கு காரணம் தற்போது உள்ள வாழ்க்கைமுறை ஆகும். வீட்டு விழா என்பது அனைவரும் கூடும் ஒரு ஒருங்கிணைப்பு
விழாவாகத்தான் இருக்கிறது. பள்ளி , கல்லூரிகளில் கொண்டாடப்படும் வெள்ளி விழா போல இன்று குடும்ப ஒருங்கிணைப்பு விழாவும் கொண்டாடப்படுகிறது.
என் மாமியார் வீட்டு சொந்தங்களின் get together function சென்ற ஆண்டு கொண்டாடினோம். தலைமுறை இடைவெளி அதிகம் இருந்தாலும் அனைவரும் இந்த விழாவை நிகழ்த்த அனுமதி அளித்தனர்.
என் கணவர், சிறிய நாத்தனார்கள் விமலா , உமா , கணவரின் மாமா பெண் பிரேமா ஆகியோர் ஆர்வத்துடன் function agenda, family book ( everyone's address with date of birth, phone no), menu ஏற்பாடு செய்தனர்.
என் மாமியார் உடன் பிறந்தோர் ஆறு பேர். ஆண்கள் மூவர், பெண்கள் மூவர்.
என் பெரிய மாமியார் இருவரும் கொள்ளு பேரன் எடுத்து விட்டனர்.
இரண்டாவது மாமியார் ராமானுஜர் உபாசகர். கண்கள் சற்று மங்கலாக தெரிந்தாலும் நன்றாக நீச்சல் அடிப்பார் இந்த வயதிலும்.தலைமுறை இடைவெளி இல்லாமல் நன்றாக உரையாடுவார். விழாவின் இறுதியில் எங்களுடன் டான்ஸ் ஆடினார்.
சின்ன மாமியார் உலக விசயங்களை கைக்குள் வைத்து இருப்பார்.
மொத்தத்தில் பெண்கள் அனைவரும் புத்திசாலிகள். மாமியாருடன் பிறந்த ஆண்கள் அனைவரும் பாசம் மிகுந்தவர்கள். ராமு மாமா மட்டுமே இப்பொது இருக்கிறார் .
நான்கு தலைமுறை சொந்தங்கள் அனைவரும் இரண்டு நாட்கள் என் இரண்டவது மாமியார் தோட்டத்தில் ஒன்றாக கூடி களித்தோம்.
கிட்டதட்ட முப்பது ஆண்டுகளுக்கு பின் மன கசப்புகள் நீங்கி, உடன் பிறந்தவர்களுடன் பெரியவர்கள் சந்தோசமாக இருந்தனர். குழந்தைகள் அனைவரும் புதிய உறவுகள் அறிமுகமான குஷியில் பொழுதை களித்தனர்.
வீட்டுக்கு திரும்பும் நாள் அன்று ,ஏதோ ஒன்றை இழந்தது போல் தோன்றியது.
விழா கொண்டாடியதன் பலன், இன்று எங்கள் குழந்தைகள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் அடிக்கடி உரையாடுகின்றனர். அவர்களுக்கு புதிய உறவுகள் அறிமுகமாகி உள்ளன.
விழா முடிந்த இந்த ஓர் ஆண்டில் , உறவு பாலம் பலமடைந்து உள்ளது.
இந்த தலைமுறையின் முதல் திருமணம் வரும் மே மாதம் 28 ஆம் நாள் வருகிறது. இது மற்றுமோர் GET TOGETHER FUNCTION.
எங்கள் தோட்டத்தில் பல மலர்கள் இருந்தாலும் , அதில் வரும் வாசனை மனதை ஈர்க்கும் சம்பங்கி போன்றது.

No comments:
Post a Comment