Sunday, 26 April 2009

வீட்டு தோட்டம்


இது என் முதல் பதிவு . தவறு இருப்பின் மன்னிக்கவும்.

சிறு வயது முதலே எனக்கு செடி கொடிகள்,தோட்டம் , மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். என் கனவில் தோட்டத்துடன் கூடிய அழகிய வீட்டில் என் வருங்காலம் அமையும் என நினைத்தேன். ஆனால் என் வாழ்க்கை கோவை மாநகரத்தில் அமைந்தது.மாமியார் ,வீட்டில் இருக்கும் சிறு காலி இடத்தில் ரோஜா,மல்லிகை முதலிய செடிகளை வைத்து இருந்தார். ரோஜா தினமும் நெறைய பூக்கும். கணவர் என்னை வெளியே அழைத்து செல்லும் போது , நான் கிராஸ் கட் ரோட்டில் லக்ஷ்மி காம்ப்ளெக்ஸ் அருகே செண்டு மல்லிகை கட்டி விற்பார்கள் .அதை மிகவும் ஆசைப்பட்டு கேட்பேன். ஆனால் அவர் வீட்டில் நெறைய பூ இருக்கிறதே இங்க எதற்கு பணம் குடுத்து வாங்க வேண்டும் என்பார். திருமணத்திற்கு செல்லும் போது கூட வாங்கி தர மாட்டார். ௨0 ரூபாய்க்கு செடி வாங்கி வைத்தால் வருடம் முழுவதும் பூ கிடைக்கும் என்பார்.
நான் ஆசைப்பட்ட மாதிரி வீடு கட்ட சில ஆண்டுகள் ஆயின. கனவு இல்லம் உருவானாலும் தோட்டம் நான் நினைத்த மாதிரி வளர மேலும் சில நாட்கள் ஆனது .
இப்போது பச்சை பசேலன்று கண் கொள்ளா காட்சியாக உள்ளது. மல்லிகை , முல்லை, செண்பகம் ,ரோஜா முதலிய மலர்கள் அழகாக பூக்கிறது. வீட்டு வாசலில் அமர்ந்தால் வாசனை மனதை கொள்ளை கொள்ளும்.

நாங்கள் யாரும் பூக்களை முழுதும் பறிக்காமல் விட்டு விடுவோம். பக்கத்து வீட்டுகாரர்கள் முதலில் எங்களிடம் பூக்கள் பறித்து கொள்கிறோம் என கேட்டார்கள். நாங்கள் மறுத்து விட்டோம். இப்பொது எல்லா மலர்களும் நன்றாக பூக்கிறது.


என் கனவு இல்லம் , வீட்டு தோட்டம் அமைய பதிமூன்று ஆண்டுகள் ஆயிற்று. வீட்டு தோட்டம் அமைய முக்கிய காரணம் என் கணவர் தான். அவர்


நான் வேலைக்கு செல்லும் பெண்மணி. பூக்கும் பூக்களை ரசிக்க எனக்கு கிடைக்கும் நேரம் மிக குறைவு .


விடுமுறை தினத்தன்று அதிகாலையில் வாசலில் அமர்ந்து காபி குடிக்கும் போது மிகவும் ஏக்கமாக இருக்கும். இல்லத்தரசிகள் போல் அவசரம் இல்லாமல் நம் இல்லத்தை , தோட்டத்தை எப்போது நிதானமாக ரசிக்க போகிறோம் ? அந்த நாள் வரும் போது நம் ரசனை மாறாமல் இருக்குமா ? அன்றும் நம் கடமைகளை செய்ய பறந்து கொண்டு தான் இருப்போம் !


நம் வருங்கால வாரிசுகள் நன்றாக இருக்க நாம் செய்யும் தியாகங்களில் இதுவும் ஒன்று. இதன் அருமை அவர்களுக்கு புரிந்தால் சரி.





1 comment: